பி.எஸ்.எம்.சாள்ஸ் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம்

2 ghgh
2 ghgh

வடக்கு மாகாண ஆளுநராக சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளர் பி.எஸ்.எம். சாள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

முன்னாள் சுங்க பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளருமான சார்ள்ஸ் விரைவில் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என பல வகையில் அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டு இருந்தது அறிந்ததே.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை கூடிய அமைச்சரவையில் இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியான பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான முன்மொழி முன்வைக்கப்பட்டது.

அதன்போதே அமைச்சரவை இந்த ஒப்புதலை வழங்கியது.

இதன்மூலம் வடக்கு மாகாண ஆளுநராக பி.எம்.எஸ். சாள்ஸ் நியமிக்கப்பட்டதுடன், அவர் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக தொடர்ந்து சேவையில் இருப்பார்.