யாழ்.மாவட்டத்தில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ அறிக்கை பெறுவதில் உள்ள நெருக்கடிகளை தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் துரித நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
மருத்துவ சான்றிதழ் வழங்கும் இடத்திற்கு இன்று காலை விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்குள்ள நிலமைகளை நேரில் அவதானித்ததுடன், மருத்துவ சான்றிதழ் வழங்குவதை சுலபமாக்குவதற்கான நடவடிக் கைளையும் ஆராய்ந்தார்.
இந்த நடவடிக்கையினை மருத்துவர் சத்தியமூர்த்தி போன்ற அதிகாரிகள் உள்ளடங்கிய குழு மேற்கொள்ளவுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ சான்றிதழ் பெறுபவர்கள் வரிசையில் நிற்கவேண்டியதில்லை.