நீரில் மூழ்கி ஒருவர் பலி

death 21

மட்டக்களப்பு மயிலவெட்டுவான் வீரக்கட்டு ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கிரான் – கோரகல்லிமடு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய கதிரேசு கங்கேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மயிலவெட்டுவான் வீரக்கட்டாற்றின் நடுவிலுள்ள மணல் திட்டியில் மணல் அகழ்ந்து வள்ளத்தில் ஏற்றிவிட்டு கரையிலுள்ள மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் உதவியுடன் கரை திரும்பும் போது ஆற்றின் மிக ஆழமான பகுதியில் நீரில் மூழ்கியுள்ளார்.