டயகமவில் வீடுகளிலும் மற்றும் விவசாய நிலங்களிலும் வெள்ளம்

Photo 1
Photo 1

மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா – டயகம பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று(03) இரவு ஆக்ரோயா ஆறு பெருக்கெடுத்து, மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக டயகம ஈஸ்ட் தோட்டத்தில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதனால் 25 வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன், மேலும் சில வீடுகளுக்கு சிறிதளவு வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

அத்தோடு, டயகம ஐந்தாம் பிரிவு தோட்டத்தில் 6 வீடுகளும், டயகம நான்காம் பிரிவு தோட்டத்தில் 10 வீடுகளும், மூன்றாம் பிரிவில் மூன்று குடும்பங்களும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளமை காரணமாக வெள்ள நீர் வீட்டினுள் புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.