நாட்டில் 45,047 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் நேற்று (03) செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை 795 பேருக்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் 2,283 பேருக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் மாத்திரை வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் இதுவரை 925,242 நபர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை 350,958 பேருக்கு அதே தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.
சைனோபார்ம் தடுப்பூசியின் முதல் மாத்திரை இதுவரை 891,630 பேருக்கு வழங்கப்பட்டது. ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் மாத்திரை 64,986 பேருக்கு வழங்கப்பட்டது.