பயணத்தடை யூன் 21 வரை நீடிக்கும் சாத்தியம்!

thanimai 1
thanimai 1

நாட்டில் தற்போது அமுலில் உள்ள முழுநேரப் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே பயணத் தடையை நீடிப்பது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயணத் தடை அமுலில் உள்ள காலப்பகுதியிலும் வைரஸ் தொற்று வீதம் குறையவில்லை. எனவே, பயணத் தடை எதிர்வரும் 21ஆம் திகதிவரை நீடிக்குமாறு அரச உயர்பீடத்திடம் சில சுகாதாரத் தரப்புகள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

எனினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அதேவேளை, நாட்டில் நாளை முதல் பயணத் தடை விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளன.