நாட்டில் மேலும் 1921 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 204,278 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை தொற்று உறுதியான 35,281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,172 பேர் இன்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 167,304 ஆக அதிகரித்துள்ளது.