முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டது எவ் விதத்திலும் அரசியல் பழிவாங்கல் அல்ல அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் அடக்குமுறைகளை கையாண்ட நபர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு செய்தால் அனைவருக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சம்பிக்க ரணவக்கவை கைதுசெய்ய்யப்பட்டதில் எவ்வித சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படாத நிலையில் இது சட்டத்திற்கு முரணான கைது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தனது கணடனத்தினை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.