ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய சுவரோவியங்கள் அழிப்பு!!

mcc
mcc

இலங்கையின் தெற்கில் அமெரிக்க அரசிற்கு எதிராக வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் உத்தரவிற்கமைய அவசர அவசரமாக அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது,

கடந்த அரசாங்கத்தினால் எம்.எம்.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் எம்.எம்.சி உடன்படிக்கை தொடர்பான நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதுடன் அவை தொடர்பில் ஆராய்வதற்கு நால்வரடங்கிய குழு ஒன்றிணையும் நியமித்துள்ளது.