5 இலட்சம் போதைப்பொருள் பாவனையாளருக்கு புனர்வாழ்வளிப்பு

namal
namal

நாடு முழுவதிலும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ள சுமார் 5 இலட்சம் பேருக்கு புனர்வாழ்வளிப்பதற்கான வேலைத்திட்டம் அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அதன் தலைவர் நாமல் ராஜபக்ஷ இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

மேலும் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 5 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவதே முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்