யாழில் தங்க நகைகளைத் தேடிஅகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

ffa29e32 a7f9 4456 9a2b afb346e4e00c
ffa29e32 a7f9 4456 9a2b afb346e4e00c

வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் சந்தேக நபர்கள் இருவரும் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்றில் தங்கநகை இருப்பதாக அகழ்வில் ஈடுபட்டபோது வல்வெட்டித்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சம்பவ இடத்தில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.