நடமாட்டத் தடையால் நாளாந்த தொழில்களில் ஈடுபடுவர்கள் பசியால் வாடும் நிலைமை தோன்றியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொவிட்-19 தடுப்பூசியானது வன்னி மாவட்ட மக்களுக்கும் செலுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலனாதன் கோரியுள்ளார்.