டெங்கு தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அறிவிப்பு

dengue
dengue

கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டெங்கு நோய் பரவல் இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் தொடரும் மழையுடனான வானிலையால் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகுவார்கள் என எதிர்பார்ப்பதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளானால் பெரசிடமோல் மத்திரை தவிர்ந்த எந்தவொரு மருந்து வகைகளையும் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார துறை மக்களை கேட்டுள்ளது.