தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய நால்வர் கைது

battinews 4
battinews 4

12.06.21 நண்பகல் முள்ளியவளை வற்றாப்பளை வீதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி வீதியில் பயணித்த புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவர் உள்ளிட்ட நால்வர் முள்ளியவளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

பயணத்தடை காலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் .இவர்கள் மீது வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் இருந்து வற்றாப்பளை சென்ற புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவர் மற்றும் வற்றாப்பளையினை சேர்ந்த இருவர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு முள்ளியவளை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் காவல்துறை பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக முள்ளியவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.