சுன்னாகம் கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது

IMG 2522
IMG 2522

சுன்னாகம் கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள், பணம் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சுன்னாகம் கந்தரோடை பாரதி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை வீடுடைத்து 21 பவுண் தாலிக்கொடி, மூக்குத்தி, உண்டியல் பணம் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன திருடப்பட்டன.

வீட்டில் இருந்தவர்கள் அயலில் உள்ள காணி துப்புரவு செய்ய சென்றிருந்த வேளை இந்த திருட்டு இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் நேற்று மாலை சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸின் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர், சந்தேக நபரை இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் சுன்னாகம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.