தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்கியது பொலிஸ் தலைமையகம்!

police
police

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெகத் அபேசிறி குணவர்தன, சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக மேல் மாகாண மற்றும் வாகன போக்குவரத்து மாவட்ட பொறுப்பாளருக்கு மேலதிகமாக தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நெருக்குகின்ற நிலையில், தேர்தலுகான முன்னேற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்குவதாயின் அது குறித்து தெரியப்படுத்துமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் அறிவித்தல் விடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.