மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க முடியாது என்றும் கை அல்லது வேறு சின்னத்தில் போட்டியிட்டாலேயே ஆதரவளிக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் அதிபர் வேட்பாளரை ஆதரிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உடன்படவில்லை எனவும் தங்களது நிபந்தனைக்கு உடன்படுகின்ற பட்சத்தில் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் 8 சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ள போதும் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் இரு தரப்பிற்குமிடையிலான பேச்சுக்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என கோத்தாபாய ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்திருந்தார்.