குப்பை போடுபவர்களை பிடிக்க சி.சி.ரி.வி பொருத்தல்!

2 df
2 df

கொழும்பு நகர பகுதியில் குப்பைகளை போடும் நபர்களை கண்டுபிடிக்க பாதுகாப்பு கேமராக்களை பொருத்துவதற்கு கொழும்பு நகர சபை தீர்மானித்துள்ளது.

கொழும்பு நகர சபையின் மேயர் ரோஸி சேனநாயக்க, நகரில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த அபராத பணத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் தேவையற்ற விளம்பர பலகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் கொழும்பு நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.