சிறையில் சம்பிக்க ரணவக்கவை ரணில், சஜித் உள்ளிட்டோர் சந்திப்பு

sajith and ranil
sajith and ranil

சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாட்டாளி சம்பிக்க ரணவக்கவை நேற்றைய தினம் ஐ,தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் வீதி விபத்தில் நபர் ஒருவருக்கு பாரிய காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் அதன் பின்னர் வாகன சாரதியை மாற்றி தப்பிச் சென்றமை முதலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.