யாழ் சிறைச்சாலையில் இரவோடிரவாக புத்தர் சிலை வைப்பு

Prisons jaffna
Prisons jaffna

யாழ். உதவி சிறைச்சாலை அத்தியட்சகராகக் கடமையாற்றுபவரின் வழிகாட்டலில் சிறைச்சாலைக்கு முன்பாக புத்தர் சிலை ஒன்று அவசர அவசரமாக அமைக்கப்பட்டு வருகிறது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் இன்றைய தினம் வருகை தரவுள்ளதால் இந்தப் புத்தர் சிலையினை விரைவாக அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக சங்கமித்தை தோணியின் மூலம் மாதகல் கரையில் வந்திறங்கிய காட்சி சிறைச்சாலையின் முன்பக்க சுவரில் வரையப்பட்டது. அந்த இடத்திலேயே இந்தச் சிலை நிறுவப்படவுள்ளது.

இவ்வாறு புதிய அரசாங்கத்தின் வருகை பௌத்த மேலாதிக்க வாதிகளின் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்கின்றதா எனும் விசனத்தினை தோற்றுவிக்கின்றது,