முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக குடும்பங்களுக்கு இலவசமாக மரக்கறிகளை விநியோகிக்கும் திட்டத்தினை தமிழ் மலர் பேரவை அமைப்பு மேற்கொண்டு வருகிறது
தமிழ் மலர் பேரவையினால் 300 ரூபா பெறுமதியான மரக்கறி வகைகள் அடங்கிய பொதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் செல்வபுரம் ,முள்ளிவாய்க்கால் கிழக்கு ,முள்ளிவாய்க்கால் மேற்கு ,வட்டுவாகல்,உடையார்கட்டு ,உண்ணாப்புலவு ,முள்ளியவளை உள்ளிட்ட பகுதிகளுக்கான 200 மரக்கறி பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது
இதனை விடவும் இதற்க்கு முன்பதாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் சுமார் 500 மரக்கறி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன
தமிழ் மலர் பேரவை அமைப்பின் செயலாளர் லோ.நிக்சன் தலைமையில் இடம்பெற்றுவரும் குறித்த செயற்றிட்டம் மாவட்ட செயலாளர் மற்றும் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய இராணுவத்தின் உதவியுடன் வீடுவீடாக சென்று மக்களுக்கு வழங்கி வைக்கப்படுகிறது