கொலை குற்றச்சாட்டில் நால்வருக்கு தூக்கு தண்டனை

Death
Death

இளைஞன் ஒருவனை கொலை செய்த குற்றச்சாட்டில் கந்​தேநுவர பிரதேசத்தைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி எச்.யூ.பீ. கரலியத்த, மரண தண்டனை விதித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

கந்தேநுவர வெவலங்க லயன் அறைகளில் வசிக்கும், துறைசாமி தமிழ்ச் செல்வம் (வயது 37), செல்லையா பாலகிருஷ்ணன் (வயது 46), இருளாண்டி க​ணேஷன் (வயது 41), துறைசாமி மனோகரன் (வயது 43), செல்வராஜ் சிவகாந்தன் (வயது 36) ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில், நான்காவது பிரதிவாதியான துறைசாமி மனோகரன், வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே மரணமடைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.