சவுதி அரேபியாவுக்குள் இடம்பெறும் சகலவிதமான ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தனியான ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு சவுதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
நிதி மற்றும் நிருவாகத் துறையில் இடம்பெறும் ஊழல்மோசடி தொடர்பில் வழக்கு தொடர்வதற்கும், அதனை விசாரணை செய்வதற்குமாக ஆணைக்குழுவில் தனியான அலகொன்றை அமைக்குமாறும் மன்னர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.