அரச செலவில் அடக்கம் செய்யப்படும் சஹ்ரான் உடல்

2 ff
2 ff

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் மற்றும் முகமது இப்ராஹிம் இல்ஹாம் ஆகியோரின் உடல் பாகங்களை உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையை அடுத்து, அரச செலவில் அடக்கம் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான், தெமட்டகொடையை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் முகமது இப்ராஹிம் இல்ஹாம் ஆகிய இருவரும் கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

பயங்கராவதிகளின் உடல் பாகங்களை உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் உடல் பாகங்களை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எஞ்சியுள்ள உடல் பாகங்களை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளருக்கு நீதிவான் ரங்க திசானாயக உத்தரவிட்டார்.