பிள்ளையானை விடுதலை செய்யுமாறு பிரதமரிடம் கருணா கோரிக்கை

karuna 2
karuna 2

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை விடுதலை செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“திருகோணமலையில் எங்கள் கட்சியின் கட்டமைப்பு முன்னெடுக்கப்படுகிறது. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் விடுதலைக்கு பல முயற்சிகளை மேற்கொள்பவன் நான். நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதுதான் எனது இலக்கு” என குறிப்பிட்டார்.