உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- காணொளிகளை ஒப்படைக்குமாறு உத்தரவு

easter attack 2
easter attack 2

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகநபர்கள் கூடி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படும் விடயங்கள் அடங்கிய சி.சி.ரி.வி காட்சிகளை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய குறித்த சி.சி.ரி.வி காட்சிகளைக் கொண்ட 2 இறுவட்டுக்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நீர்கொழும்பு ஹோட்டல் முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் உள்ளிட்ட சிலர் தாக்குதல் தொடர்பாக குறித்த ஹோட்டலில் கலந்துரையாடியதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திடம் அறிவித்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.