மஹிந்தவுக்கு செல்வம் அவசர கடிதம்

images 10
images 10

வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வீடுகளை மக்கள் தமது நிதிப் பங்களிப்புடன் கட்ட ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

அவற்றுக்குரிய நிதி அரசாங்கத்தினால் வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது.

அதனை நம்பி எமது மக்கள் தமது சொத்துக்கள், நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும் வீடுகளைக் கட்டத் தொடங்கியிருந்தனர்.

இந்நிலையில் அரசாங்கத்தினால் அவற்றிற்குரிய நிதி இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் அநேகமான வீடுகள் நிதிப் பற்றாக்குறையினால் கட்டப்பட்டு இடையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தற்போது ஏற்பட்ட கன மழை, வெள்ளத்தின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வாழ வாழ்விடம் இன்றி அல்லற்படுகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இது நாடு முழுவதும் உள்ள ஒரு பாரிய பிரச்சினையாகும்.

எனவே வீடமைப்பு அமைச்சராக உள்ள தாங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிதியினை வழங்கி மக்கள் வீடுகளை முழுமையாகக் கட்டுவதற்கும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் விரைந்து நடவடிக்கை எடுத்து உதவுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது