எதிர்த் தரப்பினர் அரசாங்கத்தைக் குறைகூறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றப்படவில்லையெனவும், அநீதியும், முறைகேடுகளும் சிம்மாசனம் ஏறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் போது இல்லாத பொல்லாததைக் கூறி, சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் எதிர்த் தரப்பினரைக் குற்றம்சாட்டியுள்ளார்.