வங்கி பொறுப்பை நிராகரித்த சட்டத்தரணி அலி சப்ரி

5 pped
5 pped

வங்கி ஒன்றின் தலைமைப் பதவியை, ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முற்றாக நிராகித்துள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பை மிகவும் தாழ்மையுடன் நிராகரித்தேன். எனினும் எல்லா வழிகளிலும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, ஆதரவு வழங்குவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கு தன்னை உள்ளீர்க்க வேண்டுமென்ற சிந்தனை உள்ளது. இதன்மூலம் நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார் .