உப்பாறு கடற்கரையில் 17 அடி நீளமான முதலை

1 d 2 1
1 d 2 1

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தின் உப்பாறு கடற்கரையில் 17 அடி நீளமான முதலை ஒன்று இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


இறந்த முதலையின் முகம் மற்றும் வாய் பகுதியில் காயமேற்பட்டுள்ள நிலையில், முதலின் பற்கள் சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இறந்த முதலையை புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.