நாட்டில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாதவகையில் மக்கள் அவதானமாக இருக்குமாறு காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை பிரதி மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மீண்டும் புதிய கொத்தணிகள் உருவாகக்கூடிய அச்சுறுத்தல் இருக்கிறது.
மக்கள் முகக்கவசங்கள் இன்றி, சுகாதாரக் கட்டுப்பாடுகளை மீறி நடமாடினால் அவ்வாறான கொத்தணிகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது.
அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் நாட்டில் நடமாட்டத் தடையை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் காவல்துறை பேச்சாளர் எச்சரித்துள்ளார்.