போதை பொருள் வர்த்தகரான மோல் சமிந்தவின் மனைவி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைத்தோட்டம் பகுதியில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
20 லட்சம் ரூபா பெறுமதியுடைய 270 கிராம் ஹெரோய்ன் போதை பொருள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கொலை குற்றச்சாட்டு தொடர்பில் மோல் சமிந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது போதை பொருள் வியாபாரத்தை கிராண்பாஸ் பகுதியில் குறித்து பெண் நடாத்துவதாக தெரியவந்துள்ளது.
33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.