சிவனொளிபாதமலைக்கான யாத்திரை காலம் ஆரம்பமானதை தொடர்ந்து போதைப்பொருட்களை எடுத்துச்சென்ற குற்றத்திற்காக இதுவரையில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரவித்தனர்.
கஞ்சா, ஹெரோயின் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் வைத்திருந்த குற்றத்தின் பேரில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணிய காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு கஞ்சா போதைப்பொருளை எடுத்துச் சென்ற 8 சந்தேக நபர்களுக்கு ரூ. 21,500 அபராதத் தொகை அறவிடப்படுவதாக ஹட்டன் நீதவான் ஜெயராம் ட்ரோஸ்கி உத்தரவிட்டுள்ளார்.