திறக்கப்பட்டது கந்தளாய் குளத்தின்கதவுகள்

download 20
download 20

நாட்டில் அதிகரித்த மழை வீழ்ச்சியினால் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதோடு, அங்குள்ள நீர் கந்தளாய் குளத்தில் விழுவதாலும் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழையினாலும் கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்ததாக நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகளில் ஆறு வான் கதவுகள் மூன்று அங்குலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள சிறிய குளங்களான வென்ராசன், கல்மெட்டியாவ, வான்எல குளங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.