ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாகஅந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க
கருத்து வெளியிட்டுள்ளார் .
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .
இதேவேளை அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக தற்போது அதிகமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இதற்கு சில காலங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடாகும்.
எனவே, இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவொரு பிளவும் ஏற்படவில்லை. 2020 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் எமது கட்சி வலுவடையும்.
எனவே, பொறுமையாக இருக்குமாறு நான் அனைத்துத் தரப்பிடமும் கேட்டுக் கொள்கிறேன்” எனவும் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.