வாகனேரி முள்ளிவட்டவான் மக்களுக்கு நீர் தாங்கிகள் மூலம் தண்ணீர் வினியோகம்.

06
06

வறட்சியால் பாதிக்கப்பட்ட ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட வாகனேரி முள்ளிவட்டவான் மக்களுக்கு நீர் தாங்கிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

தற்பொழுது நிலவும் வறட்சி காரணமாக ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் காணப்படும் முள்ளிவட்டவான் பிரதேசத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவு நிலவுவதையும், குடி நீருக்காக மக்கள் அதிகளவு சிரமப்படுவதனையும், பிரதேச சபை உறுப்பினர் வை.யோகேஸ்வரன், பிரதேச சபை தவிசாளரின் கவனத்துக்கு கொண்டுசென்றதுடன் முள்ளிவட்டவான் பிரதேச மக்களை நேரடியாக சென்றும் சந்தித்துள்ளனர்.

முள்ளிவட்டவான் மக்களின் குடிநீர் தேவையை முடியுமான அளவு தீர்த்து வைப்பதற்காக பிரதேசத்தின் முக்கிய இடங்களில் நீர் தாங்கிகள் வைக்கப்பட்டதுடன், குடி நீர் விநியோகமும் தண்ணீர் பௌசர் மூலம் வழங்கி வைக்கப்பட்டது.