தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதான 33 பேருக்கு பிணை!

7ee0999b 1f43 4b98 a33a 126fdd234233
7ee0999b 1f43 4b98 a33a 126fdd234233

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.