இந்தியாவில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் பொடி ரமேஸ் எனப்படும் போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் ஒருவர் தெமட்டகொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் அதன் மூலம் ஈட்டப்பட்ட 13 லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 30 வயதான முகத்துவாரம் பகுதியை சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.