திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சடலம் நேற்று மாலை இவ்வாறு மீட்டுள்ளதாகவும், சடலமாக மீட்கப்பட்டவர் எம்.ஹப்புஹாமி, தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை காலையில் இருந்து காணாமல் போன நிலையிலே தல்கஸ்வெவ குளத்தில் மிதந்த சடலத்தினை மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் அவதானித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சடலம் இனம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் இருதய நோய்க்குள்ளானவர் என்றும், அவர் காணமல் போன அன்றைய தினமே பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் உயிரிழந்தவரின் மகள் தெரிவித்தார்.
சடலம் தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்