குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி

india1
india1

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ராஜஸ்தானில் வாழும் பாகிஸ்தான் இந்து அகதிகள் பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்ற நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க சார்பில், சட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகள், இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நேற்று பேரணி நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இந்த பேரணி நடைபெற்றது.

இப்பேரணி குறித்து அகதி ஒருவர் கூறும்போது,

‘கடந்த 57 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். இதுவரை நாங்கள் குடியுரிமை பெறவில்லை. போதிய வசதிகளும் கிடைக்கவில்லை. இனி நாங்கள் சிறப்பாக வாழ இந்த சட்டம் உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.