வவுனியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகள் இன்று (09) இடம்பெற்றது.
வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தில் காலை 8 மணி முதல் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வைரவபுளியங்குளம், இறம்பைக்குளம், நகரம் வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று செலுத்தப்பட்டது.