பண்ணை பாலத்தில் தவறி விழுந்த நபர் சடலமாக மீட்பு

death body 3
death body 3

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் நேற்று (08) மாலை தவறி விழுந்து காணாமற்போனவர் இன்று அதிகாலை 6 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் (வயது 29) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் பணியாற்றும் இவர் பண்ணை பாலத்தடியில் நேற்றைய தினம் மாலை தனது இரு நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த போது தவறி வீழ்ந்துள்ளார்.

தவறி வீழ்ந்தவரை பாலத்தின் கீழான நீரோட்டம் அடித்து சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக கடற்படையினை தேடுதல் நடாத்தி இருந்தனர்.

இந்நிலையில் பண்ணை பகுதியிலிருந்து இன்றையதினம் காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.