கொரோனா தடுப்பூசிகளை இரண்டு தடவையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது.
இதற்கமைய மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையில் 15 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
முதலாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 51 சதவீதமாக அதிகரித்துள்ளதென தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை 60 வயதுக்கு மேற்பட்டோரை உடனடியாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானாலும் நோய் நிலைமை குறைவாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.