ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது – சுமந்திரன்

Sumanthiran
Sumanthiran

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க உதவிபுரிவோம் என தான் கூறியாதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொது தேர்தல் முடிவுகளுக்கு அமைய யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் முன்னணிக்கு 113 ஆசன அதிகாரத்தை காட்டுவதற்கான தேவையேற்பட்டால் தாம் அவர்களுக்கு ஆதரவு வழங்க தயார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியடையும் எனவும் இந்த மகத்தான வெற்றியின் மூலம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைக்க கூட்டமைப்புக்கு வாய்ப்பு கிடைக்கும்” என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த செய்தியினை மறுத்துள்ள சுமந்திரன் குறித்த கருத்து வெளியாகியிருந்த கடந்த ஞாயிறன்று நான் வடக்கு மாகாணத்திலேயே இருக்கவில்லை எனவும் எந்தக் கட்சிக் கூட்டத்திலும் பங்குபற்றவும் இல்லை என அவர் தெரிவித்தார்.