கோட்டாபய ராஜபக்சவை தேர்தல் காலத்தில் மிக மோசமாக விமர்சித்தவர்கள் இப்போது முன்டியடித்துக்கொண்டு தமது தேவைகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டுகின்றனர் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறக்கூடாது, அவர் வந்தால் நாட்டில் அபிவிருத்தி நடைபெறாது நாட்டில் பாரிய விளைவுகள் இடம்பெறும் என தமிழ்த்தேசியம் பேசுகின்ற அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் தங்களின் வீட்டுக்கு முன்னால் வீதியையும், தமது சகோதரர்களின் வீதியையும் போடுவதற்கு மிகத்தெளிவான எதிர்பார்ப்புடன் அபிவிருத்திகளை முன்னெடுப்பது பற்றி கூறுகின்றார்கள்.
கடந்தகாலம் போன்று மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அரசியல்வாதிகளின் விருப்புவெறுப்புக்காக ஒதுக்கப்படாது மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.