கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவிடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சந்திப்பின் போது முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.