மீண்டும் யாழில் பெண் மரணம்

download 3 2
download 3 2

சமைத்துவிட்டு கிணற்றில் குளிக்கச் சென்ற பெண் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

நெடுங்குளம் கொழும்புத்துறை பகுதியினை சேர்ந்த சின்னத்துரை யோகராணி (வயது 65) என்ற 4 பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவர் ஆவார்.

நேற்று மதியம் சமைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். குளிக்க சென்றவரை நீண்டநேரமாகியும் காணாத நிலையில் பிள்ளைகள் தேடியுள்ளனர். எங்கும் காணாத நிலையில் கிணற்றினை எட்டி பார்த்த மகனுக்கு தாய் நீரில் மிதந்து கொண்டு இருப்பது தெரிந்துள்ளது.