அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் வறிய மாணவர்களுக்கு தொலைபேசிகளும் வளம் குறைந்த பாடசாலைகளுக்கு தலா 5 கணினிகளும் அண்மையில் வழங்கப்பட்டன. யா/குடத்தை கரையூர் அ.த.க.பாடசாலையா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையா/புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தலா 5 கணினிகளும்யா/சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம் யா/ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தொலைபேசிகளும் வழங்கப்பட்டன.
கோவிட் பாதுகாப்பு சுகாதார வழிகாட்டலுக்கு அமைய நடைபெற்ற இந்த நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.