வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அஞ்சல் அலுவலகம் திறந்திருக்கும்!

Post Office
Post Office

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள எதிர்வரும் வாரத்தினுள் நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் 4 நாட்கள் மாத்திரமே திறக்கப்படும் என அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, திங்கள், செவ்வாய் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.