அயல் பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 6.3 மில்லியன் நிதியில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திற்கான அதிபர் விடுதி இன்று பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய முதல்வர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்து வைத்தார்.